ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டி - சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றி பெற்றது.
x
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரின், 20 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணி மோதியது. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி 159 ரன்கள் குவித்தது.


தொடர்ந்து 160 ரன்கள் என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். டேவிட் வார்னர் 6 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேற அடுத்த விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் களமிறங்கி இறுதி வரை களத்தில் நின்றார். இறுதியாக போட்டி சமனில் முடிய, இந்த தொடரின் முதல் சூப்பர் ஓவர் போட்டி நடைபெற்றது. அதில் ஒரு ஓவரில் 8 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, எளிதில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்