டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டி - களமிறங்கும் தமிழர்கள்

ஒலிம்பிக் போட்டியின் பாய்மர படகுப்போட்டி பிரிவுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டி - களமிறங்கும் தமிழர்கள்
x
ஒலிம்பிக் போட்டியின் பாய்மர படகுப்போட்டி பிரிவுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை மாதம் 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது

ஒலிம்பிக் போட்டியின் பாய்மர படகுப்போட்டி பிரிவுக்கு தமிழகத்தை சேர்ந்த நான்கு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

மகளிர் பிரிவில் சென்னையை சேர்ந்த 23 வயதான நேத்ரா குமணன் மகளிர் ஒற்றையர் லேசர் ரேடியல் பிரிவில் களமிறங்குகிறார். 

அதுமட்டுமின்றி, ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவிலிருந்து பாய்மர படகுப்போட்டிக்கு தகுதி பெறும் முதல் வீராங்கனை என்ற சாதனையையும், நேத்ரா குமணன் படைத்துள்ளார்.

அதேபோல், வருண் மற்றும் கணபதி இருவரும் இணைந்து 49er பிரிவில் களமிறங்குகின்றனர்

வேலூரை சேர்ந்த விஷ்ணு சரவணன் மும்பையிலிருந்து இந்திய ராணுவத்தில் பணியாற்றி, பயிற்சி மேற்கொண்டு ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த இந்த நான்கு வீரர்களும், ஓமனில் நடைபெற்ற ஆசிய தகுதி சுற்று போட்டியான முஷ்ஷனா ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் களம்கண்டு ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்