"மகாராஷ்டிராவில் ஐ.பி.எல். நடைபெறும்" - கட்டுப்பாடுகளுடன் நடத்த மாநில அரசு அனுமதி
மகாராஷ்டிராவில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் கொரோனா தொற்று உச்சம் அடைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளை பின்பற்றி போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் அளித்துள்ள பேட்டியில், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற ஐ.பி.எல். நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
Next Story