ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது ஐபிஎல்

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது ஐபிஎல்
x
2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இறுதிப்போட்டி மே 30ஆம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை
காண ரசிகர்களை அனுமதிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அணி ஏப்ரல் 10ஆம் தேதி டெல்லி அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி மும்பையில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் முக்கியமாக, எந்த அணியும் சொந்த நகரத்தில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்