இங்கிலாந்து கேப்டன் அபாரம் - இந்திய அணி தடுமாற்றம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.
இங்கிலாந்து கேப்டன் அபாரம் - இந்திய அணி தடுமாற்றம்
x
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின், கேப்டன் ஜோ ரூட் அபாரமாக ஆடி 218 ரன்கள் குவித்தார். இதையடுத்து 3ஆவது நாளான இன்று இங்கிலாந்து அணி 10 விக்கெட் இழப்பிற்கு 578 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்,  நதீம் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்... இதையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ரோகித் சர்மா 6 ரன்களிலும், சுப்மன் கில் 29 ரன்களிலும், விராட் கோலி 11 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். சற்று முன் வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்