சென்னையில் பிப். 5ல் முதல் டெஸ்ட் போட்டி - ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கிளப் உறுப்பினர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
சென்னையில் பிப். 5ல் முதல் டெஸ்ட் போட்டி - ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு
x
இந்திய இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிப்ரவரி 5 ம் தேதி தொடங்குகிறது. போட்டியை காண ரசிகர்கள் அனுமதியில்லை என ஏற்கனவே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துவிட்ட நிலையில், 360 நபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் உள்ள 180 கிளப் உறுப்பினர்களுக்கு தலா இரு டிக்கெட் வீதம் 360 டிக்கெட் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. எனினும் பிப்ரவரி 13 ம் தேதி இதே மைதானத்தில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 50 சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்