சென்னையில் இந்தியா - இங்கி. டெஸ்ட் போட்டி : "50% பார்வையாளர்களுக்கு அனுமதி" - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

சென்னையில் நடைபெற உள்ள இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியை காண 50 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இந்தியா - இங்கி. டெஸ்ட் போட்டி : 50% பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு
x
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. வரும் 5ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், வரும் 13ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ள நிலையில், இப்போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் பிப்ரவரி மாதத்துக்கான கொரோனா வழிகாட்டுதலின் படி 50 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து பிசிசிஐ-யிடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்  பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பிசிசிஐ 50 சதவீத ரசிகர்களை அனுமதிப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இதன்படி, 2வது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்