14 வது ஐ.பி.எல். வீரர்களுக்கான 'மினி' ஏலம் - சென்னையில் நடத்த பிசிசிஐ திட்டம்
14 வது ஐ.பி.எல்.சீசனுக்கான மினி ஏலம் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் சென்னையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
14 வது ஐ.பி.எல்.சீசனுக்கான மினி ஏலம் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் சென்னையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.2021 ம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற இருக்கிறது. போட்டிக்கான ஏலத்துக்கு தயாராகிவரும் அணிகள், தக்கவைக்கும் வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அமைப்பிடம் ஏற்கனவே கொடுத்துவிட்டன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான , மினி ஏலம் ஒன்றை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2 வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17 ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. அதன் பின் 18 அல்லது 19 ஆகிய தேதிகளில், பிசிசிஐ நிர்வாகிகள் முன்னிலையில் சென்னையிலே ஏலத்தை நடத்தி முடிக்கலாம் என பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
Next Story