3-வது டெஸ்டிலும் இந்தியாவின் வெற்றி வேட்கை தொடருமா? - இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு/

சிட்னியில் தொடங்கும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய, ஆஸ்திரேலிய அணிகளின் வீரர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
3-வது டெஸ்டிலும் இந்தியாவின் வெற்றி வேட்கை தொடருமா? - இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு/
x
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடர் 1-க்கு 1 என்ற கணக்கில் உள்ளது. 

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் வரும் 7-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் இரு போட்டிகளில் பிரதான வீரர்கள் இடம் பெறாத நிலையில் 3-வது டெஸ்டில் வார்னர், வில்  புகோவ்ஸ்கி, ரோகித் சர்மா ஆகியோரின் வருகை கூடுதல் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. 

ஆஸ்திரேலிய அணியில் கடைசி 2 டெஸ்ட் போட்டியில் சோபிக்க தவறிய ஜோ பர்னஸ் அதிரடியாக கழற்றி விடப்பட்டு உள்ளார். அதேநேரம் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து உள்ள தொடக்க வீரர் டேவிட் டேவிட் வார்னர் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். அதேபோல் பயிற்சி ஆட்டத்தின் போது ஹெல்மட்டில் பந்து பட்டு காயமடைந்த மற்றொரு இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.  

இந்திய அணியில் தனிமைப்படுத்துதல் படலத்தை முடித்து உள்ள அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 3-வது டெஸ்டில் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. பார்ம் அவுட் காரணமாக மயங்க் அகர்வால், ஹனுமா விகாரி மற்றும் காயம் காரணமாக உமேஷ் யாதவ் விலகிய நிலையில் அவர்களுக்கு பதிலாக ரோகித், கே.எல். ராகுல், நடராஜன் சேர்க்கப்படலாம் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சூசகமாக தெரிவித்து உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்