ஐபிஎல் தொடரில் மேலும் 2 புதிய அணிகள் - பிசிசிஐ ஆட்சிமன்ற கூட்டத்தில் ஒப்புதல்

ஐபிஎல் தொடரில் மேலும் 2 புதிய அணிகளை சேர்க்க பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மேலும் 2 புதிய அணிகள் - பிசிசிஐ ஆட்சிமன்ற கூட்டத்தில் ஒப்புதல்
x
பிசிசிஐயின் ஆட்சிமன்ற கூட்டம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஐபிஎல் தொடரில் மேலும் 2 புதிய அணிகளை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.  2022-ம் ஆண்டு முதல் இந்த 2 புதிய அணிகளும் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஐபிஎல் தொடரில் ஏற்கனவே 8 அணிகள் விளையாடி வந்த நிலையில் , 2022-ம் ஆண்டு முதல் 10 அணிகள் விளையாட உள்ளன. 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கும் ஐசிசியின் முயற்சிக்கு பிசிசிஐ கூட்டத்தில் மீண்டும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்