லண்டன் "ஏடிபி பைனல்ஸ்" டென்னிஸ் தொடர்- அரையிறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வரும், ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், முன்னணி வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
லண்டன் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர்- அரையிறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி
x
அரையிறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலை, 3-க்கு 6, 7-க்கு 6, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம், ஏடிபி டென்னிஸ் தொடரை வெல்லும், நடாலின் கனவு, இந்த ஆண்டும் தகர்ந்துள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டில் இருந்து, ஏடிபி டென்னிஸ் தொடரில், நடால் ஆடி வரும் நிலையில், அவர் ஒரு முறை கூட பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்