கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை அணி - இறுதி பந்தில் திரில் வெற்றி

ஐ.பி.எல் 49 வது ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொண்ட சென்னை அணி, இறுதி பந்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை அணி - இறுதி பந்தில் திரில் வெற்றி
x
துபாய் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தீர்மானித்த‌து. அதன் படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக, நிதிஷ்ராணா 87 ரன்கள் எடுத்தார். அவரது அதிரடியால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து172 ரன்கள் எடுத்த‌து. தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில், ரூத்ராஜ் கெய்க்வாட் 72 ரன்கள் எடுத்தார். இறுதியில்11 பந்துகளில் 31 ரன் என அதிரடி காட்டிய ஜடேஜா, இறுதி பந்தில் 1ரன் தேவைப்பட்டபோது சிக்சர் பறக்க விட்டு ஆட்டத்தை முடித்தார். 



Next Story

மேலும் செய்திகள்