டெல்லியிடம் வீழ்ந்தது ராஜஸ்தான் - 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி
ஐ.பி.எல் 30 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொண்ட டெல்லி அணி இறுதி ஓவரில் திரில் வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்று பேட் செய்த டெல்லி அணி, 162 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியின் ஷிகர் தவான் மற்றும் ஷ்ரேயர் ஐயர் ஆகியோர் அரைசதம் கடந்தனர். ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், பென் ஸ்டோக்ஸ் மட்டும் 40 ரன்களை கடந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
Next Story