பஞ்சாப் அணி மீண்டும் தோல்வி - 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஐதராபாத்

ஐ.பி.எல் 22 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாபை எதிர்கொண்ட ஐதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
பஞ்சாப் அணி மீண்டும் தோல்வி - 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஐதராபாத்
x
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஐதராபாத் அணியில் பெய்ர்ஸ்டோ அதிகபட்சமாக 97 ரன்கள் குவித்தார். வார்னரும் அரைசதம் கடந்தார். அந்த அணி 160 ரன்களில் தான் முதல் விக்கெட்டையே இழந்த‌து. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி, 201 ரன்கள் எடுத்த‌து. தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில்,  பூரான் 7 சிக்சர்களுடன் 77 ரன்கள் எடுத்து  மிரட்டினார். இருந்த போதும் மற்ற வீர‌ர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, அந்த அணி, 16.5 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்த நிலையில்,  அனைத்து விக்கெட்டுகளையும் இழ‌ந்த‌து. ஐதராபாத் அணியின் ரஷீத் கான், 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Next Story

மேலும் செய்திகள்