பஞ்சாப் அணி மீண்டும் தோல்வி - 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஐதராபாத்
ஐ.பி.எல் 22 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாபை எதிர்கொண்ட ஐதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஐதராபாத் அணியில் பெய்ர்ஸ்டோ அதிகபட்சமாக 97 ரன்கள் குவித்தார். வார்னரும் அரைசதம் கடந்தார். அந்த அணி 160 ரன்களில் தான் முதல் விக்கெட்டையே இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி, 201 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில், பூரான் 7 சிக்சர்களுடன் 77 ரன்கள் எடுத்து மிரட்டினார். இருந்த போதும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, அந்த அணி, 16.5 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஐதராபாத் அணியின் ரஷீத் கான், 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Next Story