கைகூடிய வெற்றி வாய்ப்பை தவறவிட்ட சி.எஸ்.கே. - கேதர் ஜாதவ் மீது ரசிகர்கள் அதிருப்தி

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கைகூடிய வெற்றி வாய்ப்பை சிஎஸ்கே அணி தவற விட்ட நிலையில் கேதர் ஜாதவ்வின் ஆட்ட திறன் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
கைகூடிய வெற்றி வாய்ப்பை தவறவிட்ட சி.எஸ்.கே. - கேதர் ஜாதவ் மீது ரசிகர்கள் அதிருப்தி
x
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 168 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது.

முக்கியமான நேரத்தில் 6 பந்துகளை சந்தித்த கேதர் ஜாதவ் வெறும்  1 ரன் மட்டுமே எடுத்து தனது சொதப்பலான ஆட்டத்தால் சி.எஸ்.கே. அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி ரசிகர்களின் கொந்தளிப்புக்கு ஆளானார் 

இறுதியில் சென்னை அணி கடைசி  6 பந்துகளுக்கு  26 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டது. 

தொடர்ந்து கடைசி ஓவரை சந்தித்த கேதர் ஜாதவ் முதல் மூன்று பந்துகளுக்கு ஒரு ரன் மட்டுமே எடுத்து பேட்டிங்கை ஜடேஜாவுக்கு கொடுக்க ஜடேஜா கடைசி 3 பந்துகளில் அதிரடி காட்டி   14 ரன்களை எடுத்தார் 

ஆனாலும் சென்னை அணிக்கு அந்த ரன் போதாத காரணத்தால் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியில் முக்கியமான நேரத்தில் 12 பந்துகளை சந்தித்த கேதர் ஜாதவ் 7 ரன்கள் மட்டுமே எடுத்து சி.எஸ்.கே.ரசிகர்களின் கடுமையான  விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளார் கேதர் ஜாதவ் ... 

கேதர் ஜாதவை உடனடியாக ஆடும் லெவனில் இருந்து வெளியேற்றி அவருக்கு பதிலாக மாற்று வீரரை கொண்டு வர வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்