ஐ.பி.எல். - கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல். போட்டியில், கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடி தோல்வியை தழுவியது.
ஐ.பி.எல். - கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
x
ஐ.பி.எல். போட்டியில், கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடி தோல்வியை தழுவியது. அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்து விளையாடிய கொல்கத்தா அணி 20 ஒவர்களில் 167 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது. பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்திய கொல்கத்தா அணிக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரர் வாட்சன், போராடி அதிகபட்சமாக 50 ரன்களை அணிக்கு சேர்த்தார். சென்னை அணியை ரன் குவிக்க விடாமல் தடுத்த கொல்கத்தா அணி, இறுதியில்10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்திருந்தது.


Next Story

மேலும் செய்திகள்