ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி - பஞ்சாபை வீழ்த்தியது சென்னை சிஎஸ்கே அணி

விக்கெட் இழப்பின்றி பஞ்சாப் அணியை வீழ்த்தியதன் மூலம் சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை ஊட்டி உள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி - பஞ்சாபை வீழ்த்தியது சென்னை சிஎஸ்கே அணி
x
விக்கெட் இழப்பின்றி பஞ்சாப் அணியை வீழ்த்தியதன் மூலம் சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை ஊட்டி உள்ளது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன் மற்றும் டு பிளேசிஸ் விக்கெட் இழக்காமல் சென்னை அணியை வெற்றிபெறச் செய்தனர். டுபிளேசிஸ் 87 ரன்களும், வாட்சன் 83 ரன்களும் குவித்தனர். இருவரும் தலா 53 பந்துகளை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி மூலம் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்கு - இறுதி நிமிடத்தில் பாண்டியா அதிரடி

சார்ஜாவில் ஐ.பி.எல், 17 வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை எதிர்கொண்ட மும்பை அணி, 209 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை  அணியில், அதிகபட்சமாக டி காக் 67 ரன்கள் விளாசினார். கடைசி நேரத்தில் பொல்லார்டு மற்றும் பாண்டியா பிரதர்ஸ் அதிரடி காட்ட  20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 208 ரன்கள் குவித்த‌து.

34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில், தொடக்கம் சிறப்பாகவே அமைந்த‌து. பொறுப்பாக ஆடிய வார்னர் 60 ரன்கள் எடுத்தார். ஆனால் இதை தொடர்ந்து வந்த வீர‌ர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்த‌தால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து, 174 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
 



Next Story

மேலும் செய்திகள்