சென்னை அணியுடன் இணைவாரா சுரேஷ் ரெய்னா? - சி.எஸ்.கே தலைமை செயல் அதிகாரி விளக்கம்

ரெய்னாவை மீண்டும் அணியில் இடம் பெறச் செய்வது குறித்து சிந்திக்கவில்லை என சி.எஸ்.கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை அணியுடன் இணைவாரா சுரேஷ் ரெய்னா? - சி.எஸ்.கே தலைமை செயல் அதிகாரி விளக்கம்
x
ரெய்னாவை மீண்டும் அணியில் இடம் பெறச் செய்வது குறித்து சிந்திக்கவில்லை என சி.எஸ்.கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை அணி  ராஜஸ்தான் , டெல்லி அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்து புள்ளி பட்டியலில் ,  சரிவை சந்தித்து உள்ள நிலையில் , ரசிகர்கள் ரெய்னா அணியுடன் இணைய வேண்டும் என டிவிட்டரில் டிரெண்ட் செய்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ரெய்னா தானாகவே , ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதால் , அவரின் முடிவுக்கு மதிப்பு அளிப்பதாகவும் , அவரை அணியில் இடம்பெறச் செய்வது குறித்து சிந்திக்கவில்லை என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்