சென்னை அணியில் அதிரடி மாற்றங்கள்!

ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.
சென்னை அணியில் அதிரடி மாற்றங்கள்!
x
ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. வெற்றி பாதைக்கு திரும்ப சென்னை அணியில் என்ன மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை காணலாம்...

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி தனது 2வது ஆட்டத்தில் , ராஜஸ்தான் அணியிடம் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

வரும் 25ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ளும் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் வாட்சன் , முதல் இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் மிடில் வரிசை வீரர்களுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டது. மும்பை அணிக்கு எதிரான மோதலில் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் , பவர் பிளேயில் சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. 

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வாட்சன், விஜய்... 33 மற்றும் 21 ரன்களில் ஆட்டமிழந்தனர்..
இதன் காரணமாக இளம் வீரரான சாம் கரணை தொடக்க வீரராக களமிறக்க வாய்ப்பு இருக்கிறது.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லுங்கி நிகிடி , இறுதி ஓவரில் 30 ரன்கள் உட்பட 4 ஓவர்களில் 56 ரன்கள் வாரி வழங்கினார் , ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதை அறிந்த போதிலும் , நிகிடி யார்கர்கள் வீசாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. 

இதனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாஷ் ஹேஸில்வுட் களமிறக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது. 6 ஓவர்களில் 103 ரன்கள் தேவைப்பட்ட போது தோனி , அதிரடியாக ஆடாமல் நிதானமாக ஆடியது தோல்விக்கான காரணங்களில் ஒன்றாகும்.. வரும் ஆட்டங்களில் தோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சென்னை அணியை வீழ்த்துவது மற்ற அணிகளுக்கு மிக கடினமாகி விடும்....


Next Story

மேலும் செய்திகள்