வலை பயிற்சிக்காக 10 பந்து வீச்சாளர்களை துபாய் அழைத்து செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் , ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதான வீரர்களை தவிர்த்து 10 பந்து வீச்சாளர்களை அழைத்து செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வலை பயிற்சிக்காக 10 பந்து வீச்சாளர்களை துபாய் அழைத்து செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ்
x
சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் , ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதான வீரர்களை தவிர்த்து 10 பந்து வீச்சாளர்களை அழைத்து செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 13வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி நிர்வாகங்களும் தங்களது வீரர்களை தயார்படுத்தி வருகின்றன. வரும் 21ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் துபாய் செல்கின்றனர். இதனையடுத்து அங்கு பயிற்சியை தொடங்குகின்றனர். அதற்காக முதல்தர கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இளையோர் அணிகளில் விளையாடும் வீரர்களில்10 பேரை துபாய் அழைத்து செல்லப்படுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்