14ம் தேதி சென்னை வரும் தோனி - சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல்

சி.எஸ்.கே கேப்டன் மகேந்திர சிங் தோனி வரும் 14ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
14ம் தேதி சென்னை வரும் தோனி - சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல்
x
சி.எஸ்.கே கேப்டன் மகேந்திர சிங் தோனி வரும் 14ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 13வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் சென்னையில் சில நாட்கள் சி.எஸ்.கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தமிழக அரசிடம் சி.எஸ்.கே நிர்வாகம் அனுமதி பெற்றுள்ளது . அகஸ்ட் 15ம் தேதி முதல் சில நாட்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். அதன் பிறகு 21ம் தேதி தனி விமானம் மூலம் துபாய் செல்கின்றனர். தோனி , ரெய்னா , பியூஷ் சாவ்லா , ஹர்பஜன் சிங், அம்பத்தி ராயுடு , தீபக் சஹார் உள்பட மற்றும் சில வீரர்கள் 14ம்தேதி சென்னை வருகின்றனர். இதனால் சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்