மீண்டும் கிரிக்கெட் போட்டி - பயிற்சி வழிகாட்டுதலை வெளியிட்டது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்நாட்டு கிரிக்கெட் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மீண்டும் கிரிக்கெட் போட்டி - பயிற்சி வழிகாட்டுதலை வெளியிட்டது பிசிசிஐ
x
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்நாட்டு கிரிக்கெட் நடவடிக்கைகளை, மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், பயிற்சி மற்றும் போட்டிகளை தொடங்க உள்ளூர் நிர்வாகம் மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் அனுமதி கோரிக்கை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீரர்கள் மற்றும்  ஊழியர்கள் தொடர்பு தடமறிதல், ஆரோக்யா சேது செயலியை பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குழு ஆலோசனை கூட்டத்தின் போது, சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் எனவும், மருத்துவ குழுவினர் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து கடந்த இரண்டு வாரத்திற்கான பயணம் மற்றும் மருத்துவ சிகிச்சை விபரங்களை பெற வேண்டும் எனவும் அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்