என்பிஏ கூடைப்பந்தாட்ட வீரர்கள் 16 பேருக்கு கொரோனா

கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் என்.பி.ஏ. கூடைப்பந்தாட்டம் ரசிகர்கள் இன்றி வருகின்ற ஜூலை 30ஆம் தேதி தொடங்கி நடைபெற இருந்தது.
என்பிஏ கூடைப்பந்தாட்ட வீரர்கள் 16 பேருக்கு கொரோனா
x
கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் என்.பி.ஏ. கூடைப்பந்தாட்டம் ரசிகர்கள் இன்றி வருகின்ற ஜூலை 30ஆம் தேதி தொடங்கி நடைபெற இருந்தது. இந்நிலையில், ஆர்லாண்டோவில் உள்ள கூடைப்பந்தாட்ட வீரர்களில் 16 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக மொத்தம் 22 அணிகளைச் சேர்ந்த 302 வீரர்கள் கலந்துகொள்ள இருக்கும் இந்த போட்டி, ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள டிஸ்னி வேர்ல்டில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது வீரர்களிடையே அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக போட்டிகள் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்