ரியோ ஓபன் டென்னிஸ் போட்டி - சிலி வீரர் சாம்பியன்
ரியோ ஓபன் டென்னிஸ் போட்டியில் சிலி வீரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
ரியோ ஓபன் டென்னிஸ் போட்டியில் சிலி வீரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இத்தாலிய வீரர் ஜியான்லுகா மேகரை எதிர்கொண்ட சிலி வீரர் கிரிஸ்டியன் கரின், 7 க்கு 6 மற்றும் 7 க்கு 5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றுள்ளார். மோசமான பருவநிலையால் போட்டியில் பல முறை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஒருவழியாக தொடர் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றி மூலம் கரின், உலகின் டாப் 20 வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
Next Story