இந்தியாவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : பாகிஸ்தான் , சீன அணிகள் விலகல்

இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து சீன துப்பாக்கி சுடுதல் அணி விலகியுள்ளது.
இந்தியாவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : பாகிஸ்தான் , சீன அணிகள் விலகல்
x
இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை துப்பாக்கி  சுடுதல் போட்டியில் இருந்து சீன துப்பாக்கி சுடுதல் அணி விலகியுள்ளது. அடுத்த  மாதம் 15ம் தேதி டெல்லியில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை காரணம் காட்டி, இந்தியாவில் நடைபெறும் ஆசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்க சீன அணிக்கு விசா வழங்க முடியாது என கூறி மத்திய அரசு அனுமதி மறுத்தது. இதன் காரணமாக உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்தும் சீன அணி விலகியுள்ளது. பாகிஸ்தான் துப்பாக்கி சுடுதல் நிர்வாகம் , தங்கள் நாட்டு வீரர்கள் 3 பேர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால் இந்தியாவிற்கு வீரர்களை அனுப்ப மாட்டோம் என தெரிவித்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்