ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது.
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி
x
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள பாட்செப்ஸ்டிரூமில் நடந்த காலிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 159 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணியில், ஜெய்ஸ்வால் 62  ரன்களும், அங்கோலேகர் 55 ரன்கள் விளாசினர். மேலும் கார்திக் தியாகி 4 விக்கெட்டும், ஆகாஷ் சிங், ஹாட்ரிக் விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்