சென்னை வருகிறார் சி.எஸ்.கே கேப்டன் தோனி

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் , மார்ச் முதல் வாரம் சி.எஸ்.கே கேப்டன் தோனி சென்னை வருகிறார்.
சென்னை வருகிறார் சி.எஸ்.கே கேப்டன் தோனி
x
13வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 29 ஆம் தேதி தொடங்குகிறது.
வீரர்கள் ஏலம் முடிந்துவிட்ட நிலையில் அனைத்து அணி நிர்வாகங்களும் வீரர்களை பயிற்சிக்கு அழைத்துள்ளனர். இந்நிலையில் சி.எஸ்.கே கேப்டன் தோனி மார்ச் மாதம் சென்னை வந்து தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட உள்ளார். கடந்த முறை வீரர்கள் பயிற்சி செய்வதை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இம்முறையும் இதே நடைமுறை கடைபிடிக்க வாய்ப்புள்ளதால் தோனியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்