"டி-20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம்" : பி.சி.சி.ஐ.க்கு பாக். கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை

2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டி-20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் : பி.சி.சி.ஐ.க்கு பாக். கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை
x
2021ஆம் ஆண்டு  இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. லாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு  கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி வாசிம் கான், வருகிற செப்டம்பர் மாதம் தங்கள் நாட்டில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்தியா மறுப்பதாக குற்றஞ்சாட்டினார். இதனால் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  பாகிஸ்தானுக்கு இந்திய அணி  சுற்றுப் பயணம் மேற்கொள்ள மறுப்பதால் ஆசிய கோப்பை தொடர் வங்கதேசத்திற்கு மாற்றப்பட உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்