மே.இ. தீவுகளுக்கு எதிரான 2வது டி-20 போட்டி : இந்திய அணி தோல்வி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
மே.இ. தீவுகளுக்கு எதிரான 2வது டி-20 போட்டி : இந்திய அணி தோல்வி
x
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில்  ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் கோலி 19 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் சர்வதேச டி.20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை கோலி முறியடித்தார். அதிகபட்சமாக சிவம் தும்பே 54 ரன்களும், ரிஷப் பண்ட் 33 ரன்களும் எடுத்தனர்.  இதனால் இருபது ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. 

Next Story

மேலும் செய்திகள்