ஐபிஎல் போட்டிகளில் " பவர் பிளேயர்" முறை : ரசிகர்களை கவர பிசிசிஐ திட்டம்

ஐபிஎல் போட்டிகளில், பிசிசிஐ புதிய விதிமுறைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில்  பவர் பிளேயர் முறை : ரசிகர்களை கவர பிசிசிஐ திட்டம்
x
ஐபிஎல் போட்டிகளில், பிசிசிஐ புதிய விதிமுறைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய "பவர் பிளேயர்" முறையை அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் செயல்படுத்த பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது. அதாவது போட்டியின் முக்கிய தருணத்தில் வெற்றியை தேடித் தரக்கூடிய, விளையாடும் லெவனில் இல்லாத வீரரை பயன்படுத்த முடியும். இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் போட்டியில் அணிகளின் வெற்றி வியூகத்தை நிர்ணயிக்க முடியாது என்பதால் ரசிகர்களை கவரலாம் என பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்