இந்தியாவுக்கு எதிரான 3வது டி-20 போட்டி : தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 3வது இருபது ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரையும் சமன் செய்தது.
இந்தியாவுக்கு எதிரான 3வது டி-20 போட்டி : தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி
x
பெங்களூருவில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதிகபட்சமாக ஷிகர் தவான் 36 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 20 ஓவர் முடி​வில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 16 புள்ளி 5வது ஓவரிலேயே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக கேப்டன் குயின்டன் டி காக் 52 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில்  இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமனில் முடிந்தது. 

Next Story

மேலும் செய்திகள்