உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - அபூர்விசண்டீலா - தீபக்குமார் இணை தங்கம் வென்று அசத்தல்
உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் கிடைத்தது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் கிடைத்தது. இந்தியாவின் அபூர்வி சண்டீலா - தீபக் குமார் இணை, சீனாவின் Quian Yang - Yu Hoanan ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. இதேபிரிவில் இந்தியாவின் மற்றொரு ஜோடியான அன்ஜும் மவுட்கில் - திவ்யான்ஷ் சிங் பன்வார் இணை, ஹங்கேரியின் Eszter Meszaros - Peter Sidi, ஜோடியை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது.
Next Story