உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி : தங்கம் கைப்பற்றி பி.வி.சிந்து சாதனை
ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பிவி சிந்து தங்கம் கைப்பற்றியுள்ளார்.
ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பிவி சிந்து தங்கம் வென்று அசத்தியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கணையை, 21 க்கு 7, 21 க்கு 7 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தினார். ஏற்கனவே 2 முறை இறுதி போட்டியில் தோல்வியை தழுவி, வெள்ளி பதக்கங்களை கைப்பற்றியிருந்த சிந்து, இந்த முறை ஜப்பான் வீராங்கனையை தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தங்கப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக தமிழக தலைவர் தமிழிசை, தினகரன், கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
Next Story