4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி : திண்டுக்கல் - மதுரை அணிகள் நாளை பலப்பரீட்சை

4- வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி : திண்டுக்கல் - மதுரை அணிகள் நாளை பலப்பரீட்சை
x
4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 5 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இறுதி போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் மோதும் 2- வது அணி எது என்பது நாளை, தெரிந்து விடும். நத்தத்தில் நடைபெறும் இந்த போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பாந்தரஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி, நாளை செவ்வாய்க்கிழமை இரவு 7.15 மணிக்கு தொடங்கும். இதற்கிடையே, இறுதிப் போட்டியிலும் வென்று, கோப்பையை கைப்பற்றுவோம் என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்