டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி

4வது தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி
x
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில், திண்டுக்கல் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின.  முதல் ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் டாஸ் போட்டு துவக்கி வைத்தார். டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ்  20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திண்டுக்கல் dragons அணி கேப்டன் அஸ்வின் 37 ரன்களை எடுத்திருந்தார் 116 வெற்றி இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

Next Story

மேலும் செய்திகள்