டி.என்.பி.எல் கிரிக்கெட் 4-வது சீசன் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் 42 பேர் தேர்வு

சென்னையில் நடைபெற்ற டி.என்.பி.எல் கிரிக்கெட் 4-வது சீசன் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் 42 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
டி.என்.பி.எல் கிரிக்கெட் 4-வது சீசன் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் 42 பேர் தேர்வு
x
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல் . 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 4 வது சீசன், ஜூலை 19ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் சென்னையில் நடைபெற்றது. ஏலத்தில் பங்கேற்ற 8 அணி உரிமையாளர்களும் போட்டி போட்டு வீரர்களை வாங்கினர். இறுதியாக ஏலத்தில் பங்கு பெற்ற 878 வீரர்களில் மொத்தம் 42 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி ஏலத்தில் 6 வீரர்களை வாங்கியது. இந்த நிகழ்வில் பேசிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் நிறுவனர் சிவந்தி ஆதித்தன், சிறப்பாக விளையாடும் வீரர்களை வாங்கியுள்ளோம் என்றும், அவர்கள் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவுவார்கள் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்