காயத்தால் இரண்டு போட்டிகளில் புவனேஷ்வர் குமார் இல்லை
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு ஏற்பட்ட காயத்தால் அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என கோலி தெரிவித்துள்ளார்.
போட்டியின் இரண்டவாது இன்னிங்சில் புவனேஷ்வர் குமார் பந்து வீசிய போது அவருக்கு இடது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோலி அடுத்த இரண்டு போட்டிகளில் புவனேஷ்வர் குமார் விளையாட மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக வரும் போட்டிகளில் முகமது ஷமி களமிறங்குவார் என்று கூறினார்.
Next Story