பிரெஞ்ச் ஓபன் - ஜோகோவிச் Vs தீம் இன்று மீண்டும் பலப்பரீட்சை
பிரெஞ்ச் ஓபன் தொடரில் ஜோகோவிச்(DJOKOVIC) மற்றும் டோமினிக் தீம் (DOMINIC THIEM) இடையிலான அரையிறுதி போட்டி மழை காரணமாக தடைபட்டது.
பாரீஸில் நடைபெற்ற இப்போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்(NOVAK DJOKOVIC), ஆஸ்திரியாவைச் சேர்ந்த டோமினிக் தீமை(DOMINIC THIEM) எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஜோகோவிச்சிற்கு, டோமினிக் தீம் ஆட்டம் காட்டினார். 6-2, 3-6, 3-1 என்ற செட் கணக்கில் டோமினிக் தீம் முன்னிலையில் இருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டத்தை நிறுத்திய நடுவர்கள், இன்று போட்டி தொடரும் என அறிவித்துள்ளனர். இன்றைய போட்டியில் வெற்றி பெறும் வீரர், நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் நடாலுடன் மோத உள்ளார்.
Next Story