ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடர் : மேற்கு இந்திய தீவுகள் அணி அபார வெற்றி

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி வீழ்ந்துள்ளது
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடர் : மேற்கு இந்திய தீவுகள் அணி அபார வெற்றி
x
டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச தீர்மானித்த‌து. இதையடுத்து மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், பாகிஸ்தான் அணியின் 7 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பியதால் அந்த அணி, 105 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த‌து. மேற்கு இந்திய தீவுகள் அணி சார்பில், ஓசேன் தாமஸ் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியினர் அதிரடியாக ஆடி, 13 ஓவர்களில் இலக்கை எட்டினர். மேற்கு இந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்கார‌ர் கிறிஸ் கெயில் அரைசதம் கடந்தார். 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஓசேன் தாமஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்