ஓய்வுக்கு பின் ஓவிய கலைஞர்? : திறமையை வெளிப்படுத்தும் டோனி

தனது சிறு வயது திறமையை வெளிக்காட்டும் நேரம் வந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.
ஓய்வுக்கு பின் ஓவிய கலைஞர்? : திறமையை வெளிப்படுத்தும் டோனி
x
தனது சிறு வயது திறமையை வெளிக்காட்டும் நேரம் வந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் சிறு வயதில் ஓவிய கலைஞராக வேண்டும் என ஆசைப்பட்டதாகவும் பின்னர் கிரிக்கெட்டின் மீது கொண்ட ஆர்வத்தால் ஓவியம் வரைவதை நிறுத்தியதாகவும் கூறியுள்ளார்.தற்போது சிறு வயது ஆசையை நிறைவேற்றி கொள்ளும் வகையில் ஓவிய கண்காட்சியில், தான் வரைந்த ஓவியங்களை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய ஓவியங்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதனை கலைஞர்கள் சுட்டிக் காட்டுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்