ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
x
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட் செய்த  கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 புள்ளி 2 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்