ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி : சென்னை அணி த்ரில் வெற்றி

ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி : சென்னை அணி த்ரில் வெற்றி
x
ஜெய்பூரில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்து விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது.  இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. ஷேன் வாட்சன் ரன் எதுவும் எடுக்காமலும், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் சொற்ப ரன்களிலும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.  இருப்பினும், அம்பத்தி ராயுடு மற்றும் டோனி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பதைக்கு அழைத்து சென்றது. சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. குறிப்பாக சென்னை அணியின் மிட்செல் சான்ட்னர் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

Next Story

மேலும் செய்திகள்