கிரிக்கெட் வீர‌ர்கள் தொழுகைக்கு சென்ற மசூதியில் துப்பாக்கிச்சூடு

நியூசிலாந்தில் வங்கதேச கிரிக்கெட் அணி வீர‌ர்கள் தங்கியிருந்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்
கிரிக்கெட் வீர‌ர்கள் தொழுகைக்கு சென்ற மசூதியில் துப்பாக்கிச்சூடு
x
நியூசிலாந்து நாட்டில், கிரிஸ்ட்சர்ச் என்ற பகுதியில் 2 மசூதிகளில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென நடத்திய  துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்துக்கு அருகில்,வங்கதேச கிரிக்கெட் அணி தங்கியுள்ளது.இது குறித்து,சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ள வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால்,துப்பாக்கிச் சூடு நடந்த மசூதியில் தொழுகைக்கு சென்ற வங்கதேச கிரிக்கெட் வீர‌ர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும்,தங்களுக்காக பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்