இந்தியா Vs ஆஸி. - இன்று கடைசி போட்டி : தொடரை கைப்பற்றுமா கோலி படை?

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியா Vs ஆஸி. - இன்று கடைசி போட்டி : தொடரை கைப்பற்றுமா கோலி படை?
x
தொடரை கைப்பற்றுவதற்காக இரு அணி வீரர்களும் டெல்லியில் முகாமிட்டு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். 2க்கு2 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளதால், வாழ்வா சாவா என்ற நெருக்கடி இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியா பங்கேற்கும் கடைசி போட்டி இது என்பதால் வெற்றியுடன் தொடரை முடிக்கும் உத்வேகத்துடன் இந்திய அணி உள்ளது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளாக இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றதில்லை. இதனால், வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் உள்ளனர். இந்தப் போட்டி இன்று மதியம் ஒன்றரை மணிக்கு தொடங்குகிறது. 

Next Story

மேலும் செய்திகள்