2018ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக கோலி தேர்வு...

2018ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணி கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.
x
2018ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களை ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் இணைய வாயிலாக தேர்வு செய்தனர். அதன் படி, 2018ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக 2வது முறையாக கோலி வென்றார். இதே போன்று டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரருக்கான விருதையும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கைப்பற்றினார்.  ஓட்டுமொத்தமாக சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விருதும் கோலிக்கு சொந்தமானது. மூன்று விருதையும் ஒரே ஆண்டில் வென்ற ஒரே வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்தார். இதே போன்று வளரும் வீரருக்கான விருதை இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் விளாசியதன் மூலம் இந்த விருதை அவர் பெற்றுள்ளார். ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்த நிகழ்வாக ஜூனியர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்