மடாதிபதி காலமானதால் கடைகள் அடைப்பு
கர்நாடக மாநிலத்தில் மடாதிபதி சிவகுமார சுவாமிகள் காலமானதால் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் 300 க்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதியில் கன்னடம் பேசும் மக்கள் அதிகளவில் வசித்து வருவதால், கன்னட மாடாதிபதியின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story