"வீரர்கள் தடை அணியை நிச்சயம் பாதிக்கும்" - கேப்டன் கோலி

ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை, இந்திய அணியை நிச்சயம் பாதிக்கும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
வீரர்கள் தடை அணியை நிச்சயம் பாதிக்கும் - கேப்டன் கோலி
x
ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை, இந்திய அணியை நிச்சயம் பாதிக்கும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். சிட்னியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹர்திக் பாண்டியா போன்ற ஆல் ரவுண்டர் இல்லை என்றால் அதனை ஈடு கட்ட சில மாற்றங்களை செய்வது அவசியம் என்றார். இதனால் அணிக்கு பாதிப்பு என்றாலும், நடந்ததை மாற்ற முடியாது என்று கோலி குறிப்பிட்டார். சூழ்நிலை எப்படி இருந்தாலும், போட்டியில் வெற்றிக்காக போராடுவோம் என்று கோலி தெரிவித்தார். இந்தியா, அஸதிரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்கும். 


Next Story

மேலும் செய்திகள்