ஆசிய கோப்பை கால்பந்து தொடர் : மெஸ்ஸியை முந்திய சுனில் செத்ரி

ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் : மெஸ்ஸியை முந்திய சுனில் செத்ரி
x
அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியின் ஆட்டத்தின் 26 வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை இந்திய அணியின் சுனில் செட்டரி, கோலாக மாற்றினர். ஆட்டத்தின் 31 வது நிமிடத்தில் தாய்லாந்து அணியின் கேப்டன் தீரசில் டாங்டா ஒரு கோல் அடிக்க, ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.விறுவிறுப்பான இரண்டாவது பாதியில்  அதிரடியாக விளையாடி இந்தியா அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்தது. இதனையடுத்து 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில் 2 கோல்கள் அடித்தன் மூலம் சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை சுனில் செற்றி முந்தினார். 

Next Story

மேலும் செய்திகள்