புதிய வரலாறு படைத்தது இந்திய அணி :ஆஸியில் முதன்முறையாக தொடரை வென்று சாதனை

சிட்னியில் நடைபெற்ற 4- வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, புதிய வரலாறு படைத்துள்ளது.
புதிய வரலாறு படைத்தது இந்திய அணி :ஆஸியில் முதன்முறையாக தொடரை வென்று சாதனை
x
 சிட்னி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தாலும், 2 க்கு 1 என்ற புள்ளிக்கணக்கில், தொடரை, இந்தியா கைப்பற்றியது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று, இந்தியா, புதிய வரலாற்று சாதனை படைத்தது. 71 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில், இந்தியா புதிய சகாப்தம் படைத்துள்ளதாக கேப்டன் வீராட்கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான, டெஸ்ட் தொடரை வென்று, வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி வீரர்கள், கோப்பை வென்ற மகிழ்ச்சியில் ரசிகர்களுடன் உற்சாக நடனமாடி கொண்டாடினர். 

Next Story

மேலும் செய்திகள்