ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி
x
ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட் செய்ய தீர்மானித்த‌து. அதன் படி, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்திருந்த‌து. தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்கார‌ர்கள் 0, 2 என்ற சொற்ப ரன்களுக்கு வெளியேறினாலும், கேப்டன் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த‌தால் இந்திய அணி 283 ரன்கள் எடுக்க முடிந்த‌து. இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 243 ரன்களுக்கு சுருட்டியது.  இந்திய அணியின் ஷமி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, இரண்டாவது இன்னிங்சிலும் தொடக்க ஆட்டக்கார‌ர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, இந்திய அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்  ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணியின் கடைசி மூன்று பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து டக் அவுட் ஆனது குறிப்பிடதக்கது. 


Next Story

மேலும் செய்திகள்